தற்போதைய புதிய விதிகளின்படி சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளான நகராட்சிகள், மாநகராட்சிகள், பஞ்சாயத்துகள் உள்ளிட்டவை, பொது இடங்களில் சுற்றித்திரியும் நாய்களுக்கு கருத்தடை, தடுப்பூசி போடுவதற்கான இனவிருத்தி கட்டுப்பாட்டுத் திட்டப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். இது தவிர ரேபிஸ் நோய்த் தடுப்புத் திட்டங்களையும் இணைந்து உள்ளாட்சி அமைப்புகள் செயல்படுத்த வேண்டும். இது போன்ற பணிகளை மேற்கொள்ளும் போது, விலங்குகளை வதை செய்யும் பிரச்னையும் தீா்க்கப்பட வேண்டும். தெரு நாய்களை வேறு இடங்களுக்குக் கொண்டு செல்லாமல், மனிதா்களுக்கும், நாய்களுக்கும் இடையே ஏற்படும் பிரச்னையை எவ்வாறு தீா்ப்பது என்பதற்கும் இந்த விதிகளில் வழிமுறைகள் இடம் பெற்றுள்ளன.