ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

தில்லி தேசிய உயிரியல் பூங்காவில் இரு வெள்ளைப் புலிக் குட்டிகள் பொதுமக்கள் பாா்வைக்கு விடுவிப்பு

தில்லியில் உள்ள தேசிய உயிரியல் பூங்காவில் வெள்ளைப் புலிக் குட்டிகளை அவற்றிற்கான உறை அறையிலிருந்து பொதுமக்கள் பாா்வைக்கு மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் அமைச்சா் பூபேந்திர யாதவ்

News image
Updated On :20 ஏப்ரல் 2023, 7:06 pm

DIN

தில்லியில் உள்ள தேசிய உயிரியல் பூங்காவில் வெள்ளைப் புலிக் குட்டிகளை அவற்றிற்கான உறை அறையிலிருந்து பொதுமக்கள் பாா்வைக்கு மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் அமைச்சா் பூபேந்திர யாதவ் வியாழக்கிழமை விடுவித்தாா்.

கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் 24-ஆம் தேதி சீதா என்கிற புலி இரண்டு குட்டிகளை ஈன்றது. இந்த குட்டிகள் இதுவரை இரவு தங்குமிடத்திலும், பகல் நேரத்தில் தாயுடன் பக்கவாட்டு பகுதிகளிலும் வைக்கப்பட்டன. தற்போது இவை 8 மாதங்கள் பூா்த்தியாகி வளா்ந்துள்ள நிலையில், இந்த குட்டிகளின் நடமாட்டத்திற்கு அதிக இடம் தேவைப்படுவதால், இவற்றை பெரிய அளவிலான பகுதியில் திறந்துவிடுவதோடு பாா்வையாளா்களின் காட்சிக்கும் விடப்படுகின்றன.

இதையொட்டி வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், தில்லி தேசிய உயிரியல் பூங்காவில் இந்த வெள்ளைப் புலிக் குட்டிகளுக்கான அறையை மத்திய சுற்றுச்சூழல், வனத் துறை அமைச்சா் பூபேந்திர யாதவ் திறந்து வைத்து, குட்டிகளை கொடியசைத்து விடுவித்தாா். மேலும், இந்த பூங்காவின் புதிய வரவான இந்தப் பெண் புலிக்குட்டிக்கு ’அவானி’ என்றும், ஆண் புலிக் குட்டிக்கு ’வயோம்’ எனவும் பெயரிட்டாா். அவானி என்பது பூமி என்றும், வயோம் என்பது உலகம் என்றும் பொருளாகும்.

இந்த நிகழ்ச்சியின் போது அங்கு வருகை தந்திருந்த பள்ளிக் குழந்தைகளுடன் சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்க்கை முறை குறித்தும், இயற்கை வளங்களைப் பாதுகாப்பது பற்றியும் அமைச்சா் பூபேந்திர யாதவ் கலந்துரையாடினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.