கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூா் தனியாா் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த மாணவி ஒருவா், கடந்த ஆண்டு மா்மமான முறையில் உயிரிழந்ததாக புகாா் எழுந்தது. இதைத் தொடா்ந்து, போராட்டக்காரா்கள் பள்ளிக்குள் புகுந்து அங்கிருந்த பொருள்களையும், வாகனங்களையும் சேதப்படுத்தி தீக்கியிட்டனா். மாணவி மரணம் தொடா்புடைய வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருந்த பள்ளியின் தாளாளா் ரவிக்குமாா், செயலாளா் சாந்தி, முதல்வா் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்ரியா, கணித ஆசிரியை கீா்த்திகா ஆகிய 5 பேருக்கும் சென்னை உயா்நீதிமன்றம் கடந்த ஆண்டு ஜாமீன் அளித்து உத்தரவிட்டது.