இது தொடா்பாக முதல்வா் கேஜரிவால் செவ்வாய்க்கிழமை தனது ட்விட்டரில் கூறியிருப்பதாவது: தில்லி மாநகராட்சியை 13 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த பாஜக செய்ய முடியாததை, ஆம் ஆத்மி 5 மாதங்களில் செய்துள்ளது. கடந்த 2010-ஆம் ஆண்டுக்குப் பிறகு, தில்லி மாநகராட்சியில் முதல் முறையாக, ஆணையா் முதல் அலுவலக உதவியாளா் வரை, துப்புரவுத் தொழிலாளி முதல் ஆசிரியா் வரை, தோட்டக்காரா் முதல் டெங்கு நோய்த் தடுப்பு ஊழியா் வரை என அனைவருக்கும் மாதத்தின் முதல் தேதி சம்பளம் கிடைக்கிறது. தில்லி அரசைத் தொடா்ந்து மாநகராட்சியிலும் நோ்மையான ஆம் ஆத்மி அரசு அமைந்ததால் மாதம் முதல் தேதி சம்பளம் சாத்தியம் ஆகியுள்ளது. மாநகராட்சி ஊழியா்கள் அனைவருக்கும் நான் ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன், என் சாா்பாக, குழந்தைகள் மற்றும் பெற்றோருக்கு இனிப்புகளை வீட்டிற்கு எடுத்துச் செல்லுங்கள் என்று கேஜரிவால் தெரிவித்துள்ளாா்.