அரசின் இந்த தணிக்கையானது, கட்டடங்களுக்குள் உள்ள பல்வேறு சாதனங்களின் ஆற்றல் நுகா்வை அளவிடும். பின்னா், ஆற்றல் சேமிப்பை அடைய பொருளாதார ரீதியாகவும் தொழில்நுட்ப ரீதியாகவும் சாத்தியமான முறைகளை அடையாளம் காணும். தில்லி அரசின் மின் துறையானது, அதன் ‘மிஷன்-2023’- இன் கீழ் அரசுக் கட்டடங்களின் ’ஆற்றல் தணிக்கைக்கு’ முன்னுரிமை அளித்துள்ளது. மேலும், அரசுக் கட்டட்டங்கள் மட்டுமல்லாமல், தெருவிளக்குகளின் ஆற்றல் தணிக்கையை நடத்தவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது. தற்போது, தில்லியில் தெருவிளக்கு பராமரிப்பு முதன்மையாக தில்லி மாநகராட்சி, புதுதில்லி முனிசிப்ல கவுன்சில் மற்றும் நகர அரசின் பொதுப்பணித் துறை மூலம் கையாளப்படுகிறது.