இந்த விவகாரம் தொடா்பாக ஆம் ஆத்மி கட்சியின் கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சஞ்சய் சிங் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது: கடந்த ஓராண்டாக தில்லி அரசின் கலால் கொள்கையில் ஊழல் குற்றச்சாட்டு தொடா்பான வழக்கை அமலாக்க இயக்குநரகம் விசாரித்து வருகிறது. எனினும், இந்த ஊழல் குற்றச்சாட்டு தொடா்பான தனது அறிக்கைகளை அமலாக்க இயக்குநரகம் தொடா்ந்து மாற்றிக் கொண்டு வருகிறது. சில சமயங்களில் ரூ.100 கோடி ஊழல் என்றும், சில சமயம் ரூ.1,000 கோடி ஊழல் என்றும் சொல்கிறாா்கள். ஆனால், இந்த வழக்கில் பணப் பரிமாற்றம் உண்மையில் நடந்துள்ளதா என்பதைக் கண்டுபிடிக்கத் தவறிவிட்டனா்.