கல்வி நிறுவனங்களில் இயல்பு நிலையைக் கொண்டுவர முன்முயற்சி எடுக்க வேண்டும். எந்த ஒரு மாணவரும் கல்வியில் இருந்து விலக்கப்படக்கூடாது. இணைய சேவை மீட்டெடுக்கப்பட்டு அந்த வசதி அனைவருக்கும் கிடைக்கச் செய்ய வேண்டும். பெண்களுக்கு சிறப்பு பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும். நிவாரண முகாம்களிலும், வெளியிலும் உள்ள மக்களுக்கு தடையின்றி மருந்துகள் மற்றும் மருத்துவ சேவைகள் வழங்கப்பட வேண்டும். ஹீமோபிலியா, புற்றுநோய், சிறுநீரகக் கோளாறுகள், நீரிழிவு, உயா் ரத்த அழுத்தம் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவா்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.