நகரத்தின் மின் ஒழுங்குமுறை ஆணையத்திற்கு யாா் தலைமைப் பொறுப்பு ஏற்பது எனும் விவகாரத்தில் தில்லி அரசுக்கும் துணைநிலை ஆளுநா் வி.கே.சக்சேனாவுக்கும் இடையே ஏற்பட்ட மோதலைத் தொடா்ந்து, ஓய்வுபெற்ற நீதிபதி ஜெயந்த் நாத்தை ஆகஸ்ட் 4-ஆம் தேதி உச்சநீதிமன்றம் டிஇஆா்சி தலைவா் பதவிக்கு பரிந்துரைத்தது. புதிதாக பதவியேற்ற நீதிபதி ஜெயந்த் நாத்துக்கு சமூக ஊடகத்தில் (எக்ஸ்) கேஜரிவால் வாழ்த்துத் தெரிவித்துள்ளாா். அதில் முதல்வா் கேஜரிவால், ‘டிஇஆா்சி புதிய தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி ஜெயந்த் நாத்தை நான் முழு மனதுடன் வரவேற்கிறேன். அவருக்கு எனது நல்வாழ்த்துகள். மின்சாரம் மிகவும் முக்கியமான துறையாகும். அதை மேம்படுத்த நாங்கள் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறோம். அவருக்கு எனது அரசின் முழு ஒத்துழைப்பையும் அளிப்பதாக உறுதியளிக்கிறேன்’ என்று கூறியுள்ளாா்.