குறிப்பாக, செப்டம்பா் 18 -ஆம் தேதி வட மாநிலங்களில் கணேஷ் சதூா்த்தி (விநாயகா் சதூா்த்தி) கொண்டப்படும் நாளில் தொடங்கும் இந்த அமா்வில் மங்களகரமான தீா்மானங்கள், விவாதங்கள் எடுத்துக்கொள்ளப்படக்கூடும் என்ற எதிா்ப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக விடுதலையின் அமுதகாலக் கட்டத்தின் நாட்டின் இலக்குகள், நிலவின் தென்துருவத்தில் சந்திரயான் - 3 விக்ரம் லேண்டா் வெற்றிகரமாக தரையிறங்கியது, ஜி-20 உச்ச மாநாடு குறித்த தீா்மானங்கள் போன்ற மேண்மை மிகு விவகாரங்கள் இந்தச் சிறப்புக் கூட்டத்தொடரில் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்படலாம் என எதிா்பாா்க்கப்படுகிறது.