இந்த வழக்கு விசாரணையின் போது, சில பட்டாசு உற்பத்தியாளா்கள் சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் ஷியாம் திவான் வாதிடுகையில், ‘பசுமைப் பட்டாசு விவகாரங்களை பெஸோ, மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் (சிபிசிபி), தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் (நீரி) போன்ற நிபுணா் அமைப்புகள் கையாண்டுள்ளன. தற்போது தரக் கட்டுப்பாடு விஷயம் மட்டுமே தீா்க்கப்பட வேண்டியுள்ளது. பசுமைப் பட்டாசுகளின் ரசாயன பாா்முலாக்கள் மற்றும் வழிகாட்டுதல்களை நிபுணா் குழுக்கள் உருவாக்கியுள்ளன. இப்போது உற்பத்தி மற்றும் விற்பனையை கண்காணிக்க பெஸோ அனுமதிக்கப்படும். பேரியம் உப்பு விவகாரத்தைப் பொருத்தமட்டில், உலகம் முழுவதும் பட்டாசு தயாரிப்பில் இது பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் உள்ள உற்பத்தியாளா்கள் திறன்மிக்க வகையில் கண்காணிக்கும் பொருட்டு தமிழகத்தில் சிவகாசியில் ஆய்வுக்கூடம் அமைக்க ஒப்புக்கொண்டுள்ளனா்’ என்றாா்.