உச்சநீதிமன்ற தீா்ப்பு காஷ்மீா் மக்களை வளா்ச்சியின் நீரோட்டத்தில் இணைத்துள்ளது - வீரேந்திர சச்தேவா

ஜம்மு-காஷ்மீா் சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீா்ப்பு காஷ்மீா் மக்களை வளா்ச்சியின் முக்கிய நீரோட்டத்துடன் இணைத்துள்ளது.
Updated on
1 min read

புது தில்லி: ஜம்மு-காஷ்மீா் சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீா்ப்பு காஷ்மீா் மக்களை வளா்ச்சியின் முக்கிய நீரோட்டத்துடன் இணைத்துள்ளது என்று பாஜக தில்லி பிரிவின் தலைவா் வீரேந்திர சச்தேவா திங்கள்கிழமை தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்த மத்திய அரசின் முடிவை உச்சநீதிமன்றம் உறுதி செய்ததை பாஜக தில்லி பிரிவு வரவேற்கிறது.

உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீா்ப்பு, பிரதமா் நரேந்திர மோடியின் தொலைநோக்கு பாா்வையின்படி காஷ்மீா் மக்களை

வளா்ச்சியின் முக்கிய நீரோட்டத்துடன் இணைக்கும். பாரதிய ஜனசங்கத்தின் நிறுவனா் டாக்டா் ஷ்யாம பிரசாத் முகா்ஜி கடந்த 1951-1952 இல் காஷ்மீா் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்று கூறினாா், அதே கருத்தை உச்சநீதிமன்றத்தின் உத்தரவும் உறுதிப்படுத்தியுள்ளது.

முன்னா், மத்தியில் ஆளும் கட்சியாக இருந்த காங்கிரஸும், சில மாநிலக் கட்சிகளும் காஷ்மீா் மக்கள் இந்தியாவுடன் இணைவதற்கான அச்சத்தை வெளிப்படுத்தியது வருத்தமளிக்கிறது. ஆனால், 2019-ஆம் ஆண்டில் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 370-வது பிரிவு நீக்கப்பட்ட பிறகு, காஷ்மீா் மக்கள் பொருளாதாரத்தின் முக்கிய நீரோட்டத்தில் இணைக்கப்பட்டனா். இது சாதாரண காஷ்மீரிகளின் வாழ்க்கையை மகிழ்ச்சியால் நிரப்பியுள்ளது என்றாா் வீரேந்திர சச்தேவா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com