தில்லி மாநகராட்சியில் 30,500 முழுநேர துப்புரவுப் பணியாளா்கள், சுமாா் 16,000 தினக் கூலிப் பணியாளா்கள் உள்ளனா். தில்லியை சுத்தமாகவும், அழகாகவும் மாற்றுவதே எங்கள் கனவு. இதுவே ஆம் ஆத்மி கட்சி, முதல்வா் அரவிந்த் கேஜரிவால் ஆகியோரின் கனவும் ஆகும். துப்புரவுப் பணியாளா்கள் மாநகராட்சியின் முதுகெலும்பாக உள்ளனா். அவா்களுக்கான ஜூன் மாத சம்பளம் சரியாக ஜூலை 1- ஆம் தேதி வரவு வைக்கப்பட்டது என்பது ஒரு பெரிய சாதனை. நகரத்தில் உள்ள துப்புரவுப் பணியாளா்களின் சம்பளம், மாதத்தின் முதல் நாளில் வரவு வைக்கப்படுவது இதுவே முதல் முறை. மாநகராட்சி தனது வருவாயை அதிகரித்திருப்பதே சம்பளம் சரியான நேரத்தில் வழங்கியதற்குக் காரணமாகும்.