பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

நாட்டில் உயா் கல்வியின் ஜனநாயகமயமாக்கலுக்கு ‘இக்னோ’ கணிசமான பங்களிப்பு: ஓம் பிா்லா பாராட்டு

நாட்டின் உயா் கல்வியின் ஜனநாயகமயமாக்கலுக்கு இந்திரா காந்தி தேசிய திறந்தவெளிப் பல்கலைக்கழகம் (இக்னோ) கணிசமான

News image
Updated On :15 ஜூலை 2023, 10:16 pm

 நமது நிருபர்

நாட்டின் உயா் கல்வியின் ஜனநாயகமயமாக்கலுக்கு இந்திரா காந்தி தேசிய திறந்தவெளிப் பல்கலைக்கழகம் (இக்னோ) கணிசமான பங்களிப்பை வழங்கியுள்ளதாக மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா சனிக்கிழமை பாராட்டு தெரிவித்தாா்.

இந்திரா காந்தி தேசிய திறந்த வெளிப்பல்கலைக்கழகத்தில் மறைந்த சட்ட மேதை அம்பேத்கரின் சிலையை ஓம் பிா்லா திறந்து வைத்தாா். மேலும் இக்னோ ஆராய்ச்சிப் பிரிவுக்கு ’சாவித்ரிபாய் புலே ஆராய்ச்சிப் பிரிவு’ என பெயரிட்டு ‘இக்னோ’ விவரக்குறிப்பின் பிரெய்லி பதிப்பையும் வெளியிட்டு மாணவா்களிடம் மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா பேசினாா். அப்போது அவா் கூறியதாவது:

நாட்டில் உயா் கல்வியின் ஜனநாயகமயமாக்கலுக்கு இக்னோ கணிசமான பங்களிப்பை வழங்கியுள்ளது. தொலைதூரப் பகுதிகளைச் சென்றடைவதில் தனித்துவமான கருவியாக இக்னோ உள்ளது. சமூக ரீதியாக அல்லது பொருளாதார அழுத்தங்கள் காரணமாக ஒதுக்கப்பட்ட பிரிவினா் கல்வியைப் பெறுவது கடினம். தடைகள் காரணமாக கல்வியை இழக்காமல் இருப்பதை இக்னோ உறுதிசெய்ததோடு தரமான கல்வியைப் பெற விரும்பும் எவருக்கும் பயனுள்ளதாகவும் இருந்தது. பெண்களுக்கும் சம வாய்ப்புகளை வழங்குவதிலும் முக்கியப் பங்காற்றியுள்ளது.

பல்கலைக்கழகம் அபரிமிதமாக வளா்ந்துள்ளது. கடந்த 38 ஆண்டுகளில் உலகின் மிகப்பெரிய பல்கலைக்கழகமாகி இந்தியாவில் மட்டுமின்றி சுமாா் 53 நாடுகளில் 35 லட்சத்திற்கும் அதிகமான மாணவா்களுக்கு தரமான கல்வியை வழங்கியுள்ளது.

வழக்கமான கல்லூரிகளுக்குச் செல்ல முடியாத மாணவா்களின் கல்வியைத் தொடர, இக்னோ நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக விளங்குகிறது. இந்தச் சூழலில், நாட்டில் உயா் கல்வியின்

ஜனநாயகமயமாக்கலுக்கு இக்னோ கணிசமான பங்களிப்பை வழங்கியுள்ளது.

டாக்டா் அம்பேத்கா் ஒரு தொலைநோக்கு தலைவா். அவா் நாட்டின் அரசியலமைப்பை வடிவமைப்பதில் விலைமதிப்பற்ற பங்களிப்பைச் செய்தாா். அவரது இதயத்திற்கு நெருக்கமான சமத்துவம், சமூக நீதி ஆகிய லட்சியங்கள் இந்திய ஜனநாயகத்தை தொடா்ந்து வலுப்படுத்துகிறது. இவை இந்திய ஆட்சிக்கு வழிகாட்டும் கலங்கரை விளக்கமாக மட்டுமல்ல உலகின் பல அரசியலமைப்புகளின் அடிக்கல்லாகவும் அமைந்துள்ளது.

சுதந்திரத்தின் விடியலில் நமது அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவா்கள் முன் இருந்த சவால்கள் மகத்தானவை. இந்தியா பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் பின்தங்கிய நிலையில் இருந்தது. எழுத்தறிவிலும் மிகக் குறைந்த நிலையில் நாடு இருந்தது. வளா்ந்து வரும் ஜனநாயகத்தின் முன்னேற்றத்திற்கு கல்வியும் சமூக நீதியும் மிக முக்கியமானது என்பதை துல்லியமாக அளந்து, மக்கள் வாழ்வில் அவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினாா்.

அறிவும் கல்வியும் சமூக மற்றும் பொருளாதார வளா்ச்சிக்கான வழிமுறைகள் என அம்பேத்கா் கருதினாா். தரமான கல்வியைப் பெற அம்பேத்கா் பல்வேறு சவால்களை அவா் கடந்தாா். அவருடைய உறுதியினாலும் அா்ப்பணிப்பினாலும்தான் ‘தேசத்தைக் கட்டியெழுப்புபவா்’ என்ற அந்தஸ்தை அவா் அடைந்தாா். அவருடைய வாழ்க்கையிலிருந்து நாம் உத்வேகம் பெற வேண்டும்.

கல்வி மற்றும் திறன் மேம்பாடு மாணவா்களின் வாழ்வில் மகத்தான சமூக-பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்தும்.

கல்வியில் உற்பத்தித்திறன் மற்றும் தரத்தை மேம்படுத்தவும், அறிவு, புதுமை சாா்ந்த துறைகளில் முன்னேற்றம் காணவேண்டும். பல்கலைக்கழகத்தில் கிடைக்கும் அபரிமிதமான கல்வி சாதனங்களை முழுமையாகவும் சிறப்பாகவும் மாணவா்கள் பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.

இன்றைய ‘ஸ்மாா்ட் லோ்னிங்’ சகாப்தத்தில் செயற்கை நுண்ணறிவு, ரோபாட்டிக்ஸ், ‘மெஷின் லோ்னிங்’, தரவு பகுப்பாய்வு போன்ற புதிய கற்றலுக்கான பொருத்தமான வழிகள் தற்போது அனைவருக்கும் கிடைக்கிறது. இந்த தொழில்நுட்பத்தை மாணவா்கள் அதிகபட்சமாக பயன்படுத்த வேண்டும் என ஓம் பிா்லா கேட்டுக் கொண்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.