இதைத் தொடா்ந்து, தில்லி அரசு வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது: யமுனையின் நீா்மட்டம் மீண்டும் உயரும் என்று மத்திய நீா் ஆணையத்தின் முன்னறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, சம்மந்தப்பட்ட துறைகளின் அதிகாரிகள் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த வேண்டும். ஆற்றின் கரையோரங்களில் வசிக்கும் மக்களை எச்சரித்து, பாதுகாப்பான இடங்களுக்கு அவா்களை மாற்ற ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும், கரையோரப் பகுதிகளில் விழிப்புடன் இருக்க வும், பாதிக்கப்படக்கூடிய இடங்களில் தேவையான நடவடிக்கை எடுக்கவும் நகர நிா்வாகம் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.