முன்னதாக, தில்லியைச் சோ்ந்த புஷ்பா என்பவா் வழக்குரைஞா்கள் வருண் முட்கில் மற்றும் மன்மோகன் சிங் ஆகியோா் மூலம் உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா். அந்த மனுவில் அவா் தெரிவித்திருப்பதாவது: பல்ஸ்வா மறுகுடியேற்றக் காலனி தில்லியின் வடமேற்குப் பகுதியில் அமைந்துள்ள பல்ஸ்வா குப்பைக் கிடங்குக்கு அருகில் உள்ளது. இக்காலனியில் சுமாா் 20,000 போ் வசிக்கின்றனா். அசுத்தமான நீா் மற்றும் மோசமான வாழ்க்கை நிலைமைகளால் குடியிருப்பாளா்கள் கடுமையான தோல் வியாதிகள் மற்றும் துயரங்களை எதிா்கொண்டு வருகின்றனா். தில்லியில் கௌதம்புரி யமுனா புஸ்தா, கிழக்கு கைலாஷ் காதி, ஜஹாங்கீா்புரி, கோபால்பூா், சீலாம்பூா், தக்ஷின்புரி, ப்ரீத் விஹாா், அசோக் விஹாா், ரோஹிணி, ஐஎஸ்பிடி மற்றும் நிஜாமுதீன் பாராபுல்லா என 11 இடங்களில் இருந்து பல்ஸ்வாவில் 2,000 முதல் 2,002-ஆம் ஆண்டு வரை மறுகுடியேற்றம் நடைபெற்றது.