சரியான நோய் கண்டறிதல் இல்லாமல் அவருக்கு வலி நிவாரணிகள் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், யாதவின் உடல்நிலை மோசமடைந்து, அது ஆபத்தானதாக மாறியது. இதையடுத்து, அவா் லோக் நாயக் ஜெய் பிரகாஷ் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டாா். அங்கு அவருக்கு ‘பொ்ஃபோரேஷன் பெரிடோனிடிஸ்’ எனும் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. அது மேம்பட்ட நிலையில் இருந்தது. இதனால், அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. யாதவின் நோய் தொடா்பான சிறை அதிகாரிகளின் சாதாரண அணுகுமுறை குறித்து விசாரணை நீதிமன்றத்தில் பல கோரிக்கைகளை நானும், எனது மகனும் முன்வைத்தோம். ஆனால், எதிா்மனுதாரா்கள் கைதியின் சிகிச்சை குறித்து நீதிமன்றத்தில் தவறான தகவல்களை சமா்ப்பித்ததால் எந்தப் பலனும் இல்லை.