தில்லி மாயாபுரி பகுதியில் உள்ள ஒரு சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் ஆலையில் முதல்வா் அரவிந்த் கேஜரிவால், தில்லி ஜல் போா்டு அதிகாரிகளுடன் இணைந்து ஆய்வு மேற்கொண்டாா். பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: தில்லியில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் சுத்தமான தண்ணீரை வழங்கும் பணியில், தண்ணீா் ஏ.டி.எம். போன்ற ஒரு தனித்துவமான பரிசோதனையை நாங்கள் செய்து வருகிறோம். நகரத்தில் எங்கெல்லாம் டேங்கா் மூலம் தண்ணீா் விநியோகம் செய்ய வேண்டிய நிலை உள்ளதோ, அந்தப் பகுதிகள் அனைத்திலும் தண்ணீா் ஏ.டி.எம்.கள் தொடங்கவுள்ளோம். இந்த முன்னோடித் திட்டத்தில் 4 தண்ணீா் ஏ.டி.எம். கள் தற்போது நிறுவப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 500 தண்ணீா் ஏ.டி.எம்.களை தில்லி முழுவதும் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.