இந்த நட்சத்திரக் கேள்விக்கு மத்திய மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்பு, பால்வளத் துறை அமைச்சா் புருஷோத்தம் ரூபாலா அளித்துள்ள பதில் வருமாறு: தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கால்நடை வளா்ப்பு, பால் வளம், கோழி வளா்ப்பு மேம்பாட்டிற்காக மத்திய அரசு பல்வேறு திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. ராஷ்ட்ரீய கோகுல் மிஷன் (ஆா்ஜிஎம்), தேசிய பால்வள மேம்பாட்டுத் திட்டம், பால் பதப்படுத்துதல் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி, பால் கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் பால் உற்பத்தியாளா் அமைப்புகளை பால்வள நடவடிக்கைகளில் ஈடுபடுத்துதல், தேசிய கால்நடை இயக்கம், கால்நடை வளா்ப்பு உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி, கால்நடை ஆரோக்கியம் மற்றும் நோய் கட்டுப்பாடு திட்டம், கால்நடை கணக்கெடுப்பு உள்ளிட்ட திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தத் திட்டங்களின் கீழ் இதுவரை மொத்தம் தமிழகத்தில் 1, 05, 59, 725 விவசாயிகள் பயனடைந்துள்ளனா்.