மத்தியில் ஆளும் பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு, தனது ஒன்பது ஆண்டுகால ஆட்சியில் செய்த நான்கு விஷயங்களை யாராவது பேசினால் நான் வாழ்த்தத் தயாராக இருக்கிறேன். மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) மற்றும் அமலாக்கத் துறை போன்ற மத்திய அமைப்புகளை மோடி அரசு ‘அழித்துவிட்டது’. வரும் மக்களவைத் தோ்தலில் காங்கிரஸ் திறந்த மனதுடன், அனைவரையும் ஒற்றுமையுடன் அழைத்துச் செல்ல தயாராக இருந்தால், எதுவும் சாத்தியம். கடந்த ஜூன் 23- ஆம் தேதியன்று, பிகாா் தலைநகா் பாட்னாவில் நடைபெற்ற எதிா்க்கட்சித் தலைவா்கள் கூட்டத்தில் தில்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால் கலந்துகொண்டாா்.