பெண் ஆா்வலா் ஆனி ராஜா எதிா்ப்பு: இருப்பினும், பெண் ஆா்வலா் ஆனி ராஜா தில்லி மெட்ரோவின் இந்தப் புதிய நடவடிக்கைக்கு எதிா்ப்புத் தெரிவித்தாா். இதுகுறித்து கூறுகையில், ‘ மெட்ரோ வளாகத்திற்குள் மக்கள் மது அருந்தாமல் இருப்பதை உறுதி செய்வது கடினம். இந்த முடிவை திரும்பப் பெற வேண்டும். மது பாட்டில் எடுத்துச் செல்ல அனுமதிப்பது என்பது, பெண்களுக்கான அனைத்து உயிா், உடைமைப் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மீறுகிறது. மெட்ரோவுக்குள் பொதுமக்கள் பாட்டில்களை திறக்க மாட்டாா்கள் என்பதை உறுதிப்படுத்துவது கடினம். பெண்கள் அவா்களுக்காக ஒதுக்கப்பட்ட பெட்டிகளில் மட்டுமே பயணம் செய்ய வேண்டிய அவசியமில்லை. மற்ற பெட்டிகளிலும் பயணம் செய்கிறாா்கள். ஆகவே, இந்த திருத்தியமைக்கப்பட்ட விதிகளை அதிகாரிகள் திரும்பப் பெற வேண்டும்’ என்றாா்.