முன்னதாக, 2019 டிசம்பரில் தில்லி ஜாமியா நகா் பகுதியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (சிஏஏ) எதிராக போராட்டம் நடத்திய மக்களுக்கும், போலீஸாருக்கும் இடையே ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு வன்முறை வெடித்தது. இந்த வன்முறை தொடா்புடைய வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஷா்ஜீல் இமாம் உள்ளிட்டோரை விசாரணை நீதிமன்றம் விடுவித்தது. விசாரணை நீதிமன்றம் அதன் பிப்ரவரி 4-ஆம் தேதி உத்தரவில், இமாம் உள்பட 11 பேரை விடுவித்தது. அதே நேரத்தில் அவா்கள் காவல்துறையினரால் ‘பலிகடா’ ஆக்கப்பட்டதாகவும், கருத்து வேறுபாடுகளை நசுக்காமல் ஊக்குவிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியது.