இந்த எஃப்எம்சி திட்டங்களில் நிலக்கரிச் சுரங்கங்களில், மாசுகளுக்கு காரணமான சாலைப் போக்குவரத்து தவிா்க்கப்பட்டு இயந்திரமயக்கப்பட்ட நோக்கில், எஃப்எம்சி திட்டத்தின் கீழ் இயந்திரமயமாக்கப்பட்ட நிலக்கரிப் போக்குவரத்து முறையை மேம்படுத்துவதாகும். சுரங்கங்களில் இருந்து எடுத்துச் செல்வதில் மனித செயல்பாடு குறைப்பு, அனல் மின் நிலையங்களுக்கான நிலக்கரி (கட்டி) அளவு, துல்லியமான எடை, சிறந்த நிலக்கரித் தரம், விரைவாக ஏற்றுதல் ஆகியவை எஃப்எம்சி திட்டங்களின் நன்மைகளாகும். குறிப்பாக நிலக்கரி அளவை சரி செய்யக்கூடிய இயந்தி (அரைவு) வசதி, ஏற்றி, இறக்கும் நேரம் குறைக்கப்படுவதற்கான கணினி போன்றவை மூலம் ரயில்வே ரேக்குகள் மற்றும் வேகன்கள் எளிதாகக் கிடைக்கப் பெற்று நிலக்கரியை விரைவாக பயன்பாட்டு இடங்களுக்கு கொண்டு செல்வதாகும். இதை முன்னிட்டு எஃப்எம்சி திட்டத்தை மத்திய நிலக்கரி அமைச்சகம் உருவாக்கியுள்ளது.