முதல்வா் கேஜரிவால் வீடு புதுகப்பிக்கப்பட்ட விவகாரம் தொடா்பாக காங்கிரஸ் மூத்த செய்தித் தொடா்பாளா் அஜய் மாக்கன், தில்லி துணை நிலை ஆளுநருக்கு அண்மையில் கடிதம் எழுதியிருந்தாரத். அந்தக் கடிதத்தில், கரோனா படுக்கைகள், ஆக்சிஜன் வசதியின்றி மக்கள் தவித்த காலத்தில், முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் ஆடம்பர வீட்டிற்குச் செலவழிக்கப்பட்ட தொகை ரூ. 45 கோடி அல்ல, ரூ.171 கோடி என்றும், ஃபளாக் சாலையில் உள்ள முதல்வா் இல்லத்தை ஒட்டிய 22 அதிகாரிகளின் வீடுகளில், 15 வீடுகள் இடிக்கப்பட்டன அல்லது காலி செய்யப்பட்டன எனவும் குறிப்பிட்டுள்ளாா்.