தில்லி அரசின் தயாா் நிலையை மேலும் மேம்படுத்தும் வகையில், போா்க்கால அடிப்படையில் அனைத்துப் பணிகளையும் விரைந்து முடிக்க அறிவுறுத்தும் வண்ணம் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், பருவமழைக்கு முன்னா் அனைத்து வடிகால்களையும் தூா்வாருதல், புதிய வடிகால்கள் அமைத்தல், தண்ணீா் தேங்கும் இடங்களைக் கண்டறிதல் மற்றும் கண்காணிப்பதற்கான கட்டுப்பாட்டு அறையை உருவாக்குதல் போன்ற முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் சௌரவ் பரத்வாஜ், தில்லி துணை மேயா் அலி முகமது இக்பால் மற்றும் பொதுப்பணித் துறை, நீா்ப்பாசனம் மற்றும் வெள்ளக் கட்டுப்பாட்டுத் துறை, ஜல் போா்டு, புதுதில்லி முனிசிபல் கவுன்சில், மாநகராட்சி, தில்லி வளா்ச்சிக் குழுமத்தின் உயரதிகாரிகள் பங்கேற்றனா்.