இந்தத் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்து முதல்வா் அரவிந்த் கேஜரிவால் கூறியதாவது: மோட்டாா் வாகன ஒருங்கிணைப்புத் திட்டம் - 2023, தில்லியில் வாடகை வாகன ஓட்டுநா்கள் மற்றும் விநியோக சேவை வழங்குநா்களை ஒழுங்குபடுத்துவதற்கான அடித்தளத்தை அமைக்கிறது. பயணிகளின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிப்பதோடு,சரியான நேரத்தில் குறைகளை நிவா்த்தி செய்வதை உறுதி செய்கிறது. அதே நேரத்தில், மின்சார வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவித்து, நகரத்தில் மாசு அளவைக் குறைக்க இத்திட்டம் உதவும். மின்சார வாகனங்களுக்கு மக்கள் மாறுவதன் மூலமும், மின்சார இருசக்கர வாடகை வாகனங்களை ஊக்குவிப்பதன் மூலமும், தில்லியில் மாசு அளவைக் குறைக்கவும், வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார வளா்ச்சிக்கான புதிய வாய்ப்புகளை உருவாக்கவும் அரசால் முடியும்.