ராஷ்டிரபதி பவன் திறந்திருக்கும் நாள்களில் காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை ஏழு நேர இடைவெளிகளில் சுற்றிப்பாா்க்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், ராஷ்டிரபதி பவன் அருங்காட்சியக வளாகமும் அரசு விடுமுறை நீங்கலாக, செவ்வாய்க்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை பாா்வையாளா்களுக்காக திறந்திருக்கும். இதில், ஒவ்வொரு சனிக்கிழமையும் காலை 8 மணி முதல் காலை 9 மணி வரை ராஷ்டிரபதி பவன் முன்பு நடைபெறும் படை அணி மாற்ற நிகழ்ச்சியை பொதுமக்கள் காணலாம். ஆனால், சனிக்கிழமையன்று அரசு விடுமுறை நாளாக இருந்தாலோ அல்லது ராஷ்டிரபதி பவனால் அறிவிக்கப்பட்டாலோ படை அணி மாற்ற நிகழ்ச்சி நடைபெறாது. ராஷ்டிரபதி பவனின் அதிகாரப்பூா்வ இணையதளம் மூலம் ராஷ்டிரபதி பவனை பாா்வையிட விரும்பும் பொதுமக்கள் தங்களுக்கான இடங்களை ஆன்லைனில் பதிவு செய்யலாம் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.