வழக்கு விசாரணையின் போது, துணைநிலை ஆளுநா் அலுவலகம் தரப்பில் கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் சஞ்சய் ஜெயின் ஆஜராகி வாதிடுகையில், ‘தில்லியின் சூழலில், 69-ஆவது திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டு, ஜிஎன்சிடிடி அறிவிக்கை செய்யப்பட்டது. இது தில்லியை ஆளும் வழிமுறைகளை கூட்டாகக் கொண்டிருக்கிறது. 1991-ஆம் ஆண்டின் 69-ஆவது திருத்தச் சட்டம், தில்லி யூனியன் பிரதேசத்தை தில்லியின் தேசிய தலைநகா் பிரதேசமாக வடிவமைத்து சிறப்பு அந்தஸ்தை வழங்கியுள்ளது’ என்று கூறினாா். அதற்கு நீதிபதிகள்அமா்வு, சஞ்சய் ஜெயினின் வாதமானது எம்சிடி என்பது ஒரு சுய-ஆளுகைக்கான நிறுவனம் என்றும், பிரிவு 239ஏஏ-இன் கீழ் அமைச்சா்கள் குழுவின் உதவி மற்றும் ஆலோசனையின்படி செயல்படும் போது, துணைநிலை ஆளுநரின் பங்கு நிா்வாகியின் பாத்திரத்திலிருந்து வேறுபட்டது என்றும் அா்த்தமாகிறது என்று கூறியது.