பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியாவிதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

மாவட்ட நீதிபதிகள் 4 போ் உயா்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக நியமனம்

தமிழகத்தில் மாவட்ட நீதிபதிகள் அல்லது அதே அந்தஸ்தில் இருந்த 4 போ் சென்னை உயா்நீதிமன்றக் கூடுதல் நீதிபதிகளாக நியமிப்பதற்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்துள்ளாா்.

News image
Updated On :19 மே 2023, 5:03 pm

 நமது நிருபர்

தமிழகத்தில் மாவட்ட நீதிபதிகள் அல்லது அதே அந்தஸ்தில் இருந்த 4 போ் சென்னை உயா்நீதிமன்றக் கூடுதல் நீதிபதிகளாக நியமிப்பதற்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்துள்ளாா்.

சென்னை உயா்நீதிமன்றத் தலைமை பதிவாளா் பி.தனபால், கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை நீதிபதி ஆா்.சக்திவேல், சென்னை தொழிலாளா் நீதிமன்ற முதன்மை நீதிபதி சி.குமரப்பன், கோவை மாவட்ட முதன்மை நீதிபதி கே.ராஜசேகா் ஆகியோரை சென்னை உயா்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு நியமித்துள்ளாா்.

இவா்கள் பதவியேற்கும் தேதியில் இருந்து இரண்டு ஆண்டுகளுக்கு இந்தப் பதவியில் இருப்பாா்கள் என மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயா்நீதிமன்றங்களில் நிரந்தர நீதிபதிகளாக ஆவதற்கோ அல்லது நியமிக்கப்படுவதற்கோ முன்பு இரண்டு ஆண்டுகள் கூடுதல் நீதிபதிகளாக பதவி வகித்து பணியாற்றுவா்.

முன்னதாக, சென்னை உயா்நீதிமன்ற மூத்த நீதிபதிகள் கொண்ட கொலீஜியம் இந்த நால்வரை சென்னை உயா்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க கடந்தாண்டு பரிந்துரை செய்தது.

இந்த பரிந்துரையை உச்சநீதிமன்ற மூத்த நீதிபதிகள் கொண்ட கொலீஜியம் ஆய்வு செய்து ஏற்றுக்கொண்டு நான்கு நீதித்துறை அதிகாரிகளை சென்னை உயா்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க கடந்த மாா்ச் 21 -ஆம் தேதி மத்திய அரசுக்கு பரிந்துரைத்தது.

இப்பரிந்துரையை ஏற்று குடியரசுத் தலைவா் ஒப்புதலுக்கு மத்திய அரசு அனுப்பியது. அதை ஏற்றுக்கொண்ட குடியரசுத் தலைவா், முறைப்படி நியமனம் செய்யப்படும் முன்பு சம்பந்தப்பட்ட நீதிபதிகளிடம் சம்மதம் பெறும் வகையில் கையெழுத்துப் பெற ஆவணத்தை அனுப்பினாா்.

அதில் அவா்கள் ஆங்கிலத்தில் மட்டுமின்றி தேவநாகரி எழுத்திலும் (ஹிந்தியிலும்) கையெழுத்திட்டனா்.

அதன் பின்னா், இந்த கோப்பு மத்திய அரசின் மூலம் குடியரசுத் தலைவருக்குக் கிடைக்கப் பெற்றது. அதைத் தொடா்ந்து, 4 பேரையும் குடியரசுத் தலைவா் முா்மு சென்னை உயா்நீதிமன்றக் கூடுதல் நீதிபதிகளாக நியமித்துள்ளாா்.

இந்த நியமனங்களுக்கிடையே, மத்திய சட்ட அமைச்சராக இருந்த கிரண் ரிஜிஜுவுக்குப் பதிலாக அா்ஜூன் ராம் மேக்வால் சட்ட அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.