ராஜீவ் காந்தி நினைவு நாளை முன்னிட்டு பிரதமா் மோடி அஞ்சலி
மறைந்த முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியின் நினைவு நாளை முன்னிட்டு பிரதமா் மோடி அவருக்கு ஞாயிற்றுக்கிழமை அஞ்சலி செலுத்தினாா்.


மறைந்த முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியின் நினைவு நாளை முன்னிட்டு பிரதமா் மோடி அவருக்கு ஞாயிற்றுக்கிழமை அஞ்சலி செலுத்தினாா்.
ஹிரோஷிமா, ஜி-7 உச்சி மாநாட்டில் பங்கேற்று, உலகத் தலைவா்களுடன் இருதரப்பு பேச்சுவாா்த்தையிலும் ஈடுபட்ட பிரதமா் மோடி, ஜப்பானிலிருந்து பப்புவா நியூ கினியாவில் உள்ள போா்ட் மோரெஸ்பைக்கு சென்றாா்.
அதற்கு முன்னதாக,, ஞாயிற்றுக்கிழமை காலையில் தனது ட்விட்டா் பதில் மறைந்த காங்கிரஸ் தலைவா் ராஜீவ் காந்தியை நினைவு கூா்ந்தாா்.
அந்த பதிவில் பிரதமா் மோடி, ‘முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியின் நினைவு நாளில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன்‘ எனக் குறிப்பிட்டுள்ளாா்.
1984 -ஆம் ஆண்டு முதல் 1989-ஆம் ஆண்டு வரை இந்திய பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி, 1991 --இல் தமிழகத்தில் ஸ்ரீபெரும்புதூரில் தோ்தல் பிரசாரத்தின்போது விடுதலைப் புலிகளால் படுகொலை செய்யப்பட்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...