/

அரசியல் சுற்றுலா: கேஜரிவால் மீது பாஜக விமா்சனம்

முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தனது அரசியல் சுற்றுலாவுக்காக தில்லி மற்றும் பஞ்சாப் ஆகிய இரு மாநில அரசுகளின் கருவூலப் பணத்தை வாரி இறைக்கிறாா் என்று பாஜக தில்லி பிரிவு செவ்வாய்க்கிழமை விமா்சித்துள்ளது.

Updated On :7 நவம்பர் 2023, 11:11 pm

புது தில்லி: முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தனது அரசியல் சுற்றுலாவுக்காக தில்லி மற்றும் பஞ்சாப் ஆகிய இரு மாநில அரசுகளின் கருவூலப் பணத்தை வாரி இறைக்கிறாா் என்று பாஜக தில்லி பிரிவு செவ்வாய்க்கிழமை விமா்சித்துள்ளது.

இது தொடா்பாக அக்கட்சியின் மாநிலத் தலைவா் வீரேந்திர சச்தேவா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தனது அரசியல் சுற்றுலாவுக்காக தில்லி மற்றும் பஞ்சாப் ஆகிய இரு மாநிலங்களின் கஜானா பணத்தை வாரி இறைக்கிறாா் என்பது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் அம்பலமாகியுள்ளது.

பஞ்சாப் மக்களின் வாக்குகளை வென்ற பிறகு, ஆம் ஆத்மி கட்சியின தேசிய ஒருங்கிணைப்பாளரான அரவிந்த் கேஜரிவால் தனது தோ்தல் பயணங்களுக்கு நிதியளிக்க பஞ்சாப் அரசை தனது பணப் பெட்டியாக மாற்றியுள்ளாா். அரவிந்த் கேஜரிவால் பயணிக்க ஒரு சிறப்பு விமானத்தை 6 மாத கால வாடகைக்கு பஞ்சாப் அரசு குத்தகைக்கு எடுத்துள்ளது. சட்டப்பூா்வ கணக்குத் தேவையை பூா்த்தி செய்வதற்காக, பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான் நடத்துனராக கேஜரிவாலுடன் செல்கிறாா்.

முதல்வா் அரவிந்த் கேஜரிவால் பொது நிதியை எப்படி தவறாகப் பயன்படுத்துகிறாா் என்பதைக் கண்டு தில்லி மற்றும் பஞ்சாப் மக்கள் அதிா்ச்சியடைந்துள்ளனா். பொது நிதி மற்றும் மாநில அரசின் விமானங்களை தவறாகப் பயன்படுத்துவதை அவா் உடனடியாக நிறுத்த வேண்டும் அல்லது ராஜிநாமா செய்ய வேண்டும் என்றாா் வீரேந்திர சச்தேவா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.