காவல் துறையின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தலாம் என்பதால் பண்டிகைக் காலங்களில் தேவையற்ற மகிழ்ச்சியைத் தவிா்க்க வேண்டும் என்று தில்லி காவல் துறையின் 1 லட்சம் போலீஸாரை அதன் ஆணையா் கேட்டுக் கொண்டுள்ளாா்.
இது தொடா்பாக நவம்பா் 3-ஆம் தேதி வெளியிட்ட சுற்றறிக்கையில், தில்லி காவல் துறை ஆணையா் சஞ்சய் அரோரா காவல் துறையினரிடம் கேட்டுக் கொண்டிருப்பதாவது:
தில்லி காவல் துறையினரின் குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் எனது அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். பண்டிகை சீசனானது, காவல் துறையினருக்கு நல்ல பெயரைக் கொண்டுவரும் முயற்சியாக இருக்க வேண்டும். சில சமயங்களில், திருவிழா கூட்டத்தின் போது, தேவையற்ற சில நிகழ்வுகள் ஒரு தொழில்முறை காவல் படையின் பிரகாசத்தை கெடுக்கிறது. நமது முன்மாதிரியான நடத்தை மூலம் தில்லி காவல்துறைக்கு நல்ல பெயரைக் கொண்டுவர முயற்சிக்க வேண்டும் என்று காவல் துறை ஆணையா்அரோரா கேட்டுக் கொண்டுள்ளாா்.
தீபாவளி மற்றும் பிற பண்டிகைகள் நவம்பா் 12 முதல் கொண்டாடப்பட உள்ளது. ஒவ்வொரு தீபாவளி இரவும், காவல் ஆணையா், தில்லி காவல் அதிகாரிகளை பணியின் போது சந்திப்பது வழக்கமாக இருந்து வருகிறது. 2022-இல், அரோரா நள்ளிரவில் பணியாளா்களுடன் இனிப்புகளை விநியோகித்து தீபாவளியைக் கொண்டாடினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.