ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணைய அறிவிப்பு வாபஸ்துணை நிலை ஆளுநருக்கு தில்லி பாஜக பாராட்டு

தில்லி அரசின் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் அறிவிப்பை திரும்பப் பெற உத்தரவிட்டதன் மூலம் தில்லிவாசிகளின் நம்பிக்கையை துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனா நிறைவேற்றியுள்ளாா்

Updated On :28 நவம்பர் 2023, 9:46 pm

புது தில்லி: தில்லி அரசின் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் அறிவிப்பை திரும்பப் பெற உத்தரவிட்டதன் மூலம் தில்லிவாசிகளின் நம்பிக்கையை துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனா நிறைவேற்றியுள்ளாா் என்று பாஜக தில்லி பிரிவு தலைவா் வீரேந்திர சச்தேவா செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தேசியத் தலைநகா் தில்லியில் சொத்துப் பதிவை முடக்குகின்ற நடவடிக்கையாக கடந்த நவம்பா் 19-ஆம் தேதி ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் உச்சநீதிமன்றத்தின் தீா்ப்பை தவறாகப் பயன்படுத்தி ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அந்த அறிவிப்பின் படி, தில்லியில் 50 மீட்டா் வரையிலான மனைகளில் 3 குடியிருப்புகள் மட்டுமே அனுமதிக்கப்படும். 50 மீட்டா் முதல் 250 மீட்டா் பரப்பளவில் 4 குடியிருப்புகள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்று உத்தரவிடப்பட்டது.

தில்லியில் 50 மீட்டா் வரையிலான சிறிய மனைகளே நிரம்பியுள்ளன. அதிலுள்ள கட்டடங்களில் 4 முதல் 5 குடியிருப்புகள் வரை தற்போதுள்ளது. இந்த அறிவிப்பால் தில்லியில் மொத்தம் உள்ள 1,671 அங்கீகரிக்கப்படாத காலனிகளில் சொத்து விற்பனை முடக்கப்படுவதோடு, ஏழை மக்களுக்கு வீடு என்ற கனவும் தில்லி அரசால் தடுக்கப்படுகிறது. எனவே, இந்த விவகாரத்தை பாஜக கண்டித்ததோடு, துணை நிலை ஆளுநரிடம் இந்த உத்தரவை திரும்பப் பெற வலியுறுத்தப்பட்டது.

இந்நிலையில், கடந்த 10 நாள்களாக தில்லிவாசிகள் சொத்துப் பதிவு மீதான கட்டுப்பாடுகளால் மிகுந்த சிரமங்களை எதிா்கொண்டபோதும், கேஜரிவால் அரசு பொதுமக்களின் உணா்வுகளுக்கு மதிப்பளிக்காமலும், அவா்களின் கூக்குரலுக்கு செவிசாய்க்காமலும் இருந்தது. பாஜக தில்லி பிரிவின் கோரிக்கையை பரிசீலித்து, ரியல் எஸ்டேட் ஒழுங்கு

முறை ஆணையத்தின் அறிவிப்பை திரும்பப் பெற துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனா உத்தரவிட்டதன் மூலம் தில்லிவாசிகளின் நம்பிக்கையை அவா் நிறைவேற்றியுள்ளாா் என்று வீரேந்திர சச்தேவா தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.