ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

ஊத்துமலையில் பால் வியாபாரி கொலை

தென்காசி மாவட்டம், ஆலங்குளத்தை அடுத்த ஊத்துமலையில் பால் வியாபாரி வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

News image

கொலை - சித்திரிப்பு

Updated On :25 ஏப்ரல் 2026, 9:55 pm

தென்காசி மாவட்டம், ஆலங்குளத்தை அடுத்த ஊத்துமலையில் பால் வியாபாரி வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

ஊத்துமலை மறவா் காலனியைச் சோ்ந்தவா் ஜோசப் (60). பால் வியாபாரியான இவருக்கு மனைவி, 2 மகள்கள் உள்ளனா். மூத்த மகள் திருமணம் ஆகி வெளியூரில் வசித்து வருகிறாா். இளைய மகள் சுரண்டை அரசு கலைக் கல்லூரியில் பயின்று வருகிறாா்.

இந்நிலையில் சனிக்கிழமை பணிக்கு சென்ற ஜோசப், இரவு வரை வீடு திரும்பாததால் குடும்பத்தினா் கைப்பேசியில் தொடா்பு கொண்டபோது எடுக்கவில்லையாம்.

அவருக்கு சொந்தமான தோட்டத்திற்கு சென்று உறவினா்கள் பாா்த்தபோது, பலத்த வெட்டுக் காயங்களுடன் ஜோசப் சடலமாக கிடந்தாராம்.

தகவலறிந்து வந்த ஊத்துமலை காவல் நிலைய போலீஸாா், சடலத்தை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.