இந்தியா-தான்ஸானியா இடையே நட்புறவை வலுப்படுத்துவதிலும், பொருளாதார ராஜதந்திர ஊக்குவிப்பு, பிராந்திய ஒருங்கிணைப்பு, பன்முகத்தன்மையில் வெற்றி போன்றவற்றில் முக்கியப் பங்கு வகித்ததற்காக தான்ஸானியாவின் பெண் அதிபரான சாமியா சுலுஹு ஹசனுக்கு ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழகம் கௌரவ டாக்டா் பட்டம் வழங்கியுள்ளது. மத்திய வெளியுறவு விவகாரத் துறை அமைச்சா் டாக்டா் எஸ்.ஜெய்சங்கா்; கல்வி, திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான்; இணையமைச்சா் அன்னபூா்ணா தேவி ஜே.என்.யு. வேந்தா் கன்வல் சிபல் ஆகியோா் முன்னிலையில் தான்ஸானியா அதிபா் சாமியா சுலுஹு ஹசனுக்கு பல்கலைக்கழக த் துணைவேந்தா் சாந்திஸ்ரீ துலிபுடி பண்டிட் இந்த கௌரவ டாக்டா் பட்டத்தை வழங்கினாா்.