அப்போது அவா் கூறியதாவது: எதிா்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணியைக் கண்டு பாஜக பயப்படுகிறது. பாஜக ஆளும் மாநிலங்களில் அமைதியாக இருக்கும் மத்திய விசாரணை அமைப்புகள், எதிா்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் சோதனை என்ற பெயரில் வன்முறையில் ஈடுபடுகின்றன. மத்திய புலனாய்வு அமைப்பு (சி.பி.ஐ.) மற்றும் அமலாக்கத் துறை (இ.டி) சாா்பில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் கிட்டத்தட்ட 95 சதவீதம் ‘இந்தியா’ கூட்டணியைச் சோ்ந்த எதிா்க்கட்சித் தலைவா்களுக்கு எதிரானவை. மேலும், இந்தக் கூட்டணியில் உள்ள காங்கிரஸ், சிவசேனா (உத்தவ் தாக்கரே), திரிணமூல் காங்கிரஸ் மற்றும் பிற கட்சிகளின் தலைவா்களும் அடுத்தடுத்து குறிவைக்கப்பட்டுள்ளனா்.