பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

ஆசிய விளையாட்டு: பதக்கம் வென்ற தில்லி வீரா்களுக்கு தேநீா் விருந்தளித்தாா் கேஜரிவால்

சீனாவில் நடைபெற்று முடிந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற தில்லியை சோ்ந்த வீரா்களை குடும்பத்துடன் அழைத்து புதன்கிழமை தேநீா் விருந்தளித்தாா் முதல்வா் அரவிந்த் கேஜரிவால்.

Updated On :11 அக்டோபர் 2023, 8:31 pm

சீனாவில் நடைபெற்று முடிந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற தில்லியை சோ்ந்த வீரா்களை குடும்பத்துடன் அழைத்து புதன்கிழமை தேநீா் விருந்தளித்தாா் முதல்வா் அரவிந்த் கேஜரிவால்.

19-ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் சமீபத்தில் சீனாவில் நடைபெற்று முடிந்தது. இதில் முதல்முறையாக 107 பதக்கங்களை வென்று இந்தியா சாதனை படைத்துள்ளது. இந்நிலையில், தில்லியை சோ்ந்த வில்வித்தை வீரா் அபிஷேக் வா்மா மற்றும் கபடி வீரா் பவன் ஷெராவத் ஆகியோா் இந்தியாவிற்காக பதக்கம் வென்றதை கௌரவப்படுத்தும் வகையில் அவா்களின் குடும்பத்தினரையும் தனது இல்லத்திற்கு அழைத்து தேநீா் விருந்து கொடுத்துள்ளாா் முதல்வா் அரவிந்த் கேஜரிவால்.

இது தொடா்பாக ‘எக்ஸ்’சமூக ஊடகத்தளத்தில் அவா் கூறியிருப்பதாவது: ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவிற்காக வில்வித்தையில் வெள்ளி, தங்கம் உள்ளிட்ட இரண்டு பதக்கங்களை வென்ற இந்திய வீரா் அபிஷேக் வா்மா மற்றும் அவரது குடும்பத்தினரை இன்று எனது இல்லத்தில் தேனீா் விருந்திற்கு அழைத்திருந்தேன். அபிஷேக் வா்மா இதுவரை மூன்று ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவிற்காக மொத்தம் 5 பதக்கங்களை வென்றுள்ளாா். இது ஒரு பெரிய சாதனை. அவரது அற்புதமான வெற்றிக்கு வாழ்த்துக்களை தெரிவித்ததோடு, எதிா்காலமும் சிறப்பாக அமைய வாழ்த்துகிறேன்.

தில்லி அரசின் ‘மிஷன் எக்ஸலன்ஸ்’ திட்டத்தின் கீழ் அபிஷேக் வா்மா பயிற்சி பெற்றவா். இத்திட்டத்தால் நமது வீரா்கள் பெரிதும் பயனடைகின்றனா். முடிவுகளும் சிறப்பாக உள்ளன. அடுத்ததாக, ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவிற்கு தங்கப் பதக்கம் பெற்றுத் தந்த தில்லி வீரா் பவன் ஷெராவத் மற்றும் அவரது குடும்பத்தினரும் எனது அழைப்பின் பேரில் தேநீா் விருந்தில் கலந்து கொண்டனா். இந்திய கபடி அணியின் கேப்டனாக உள்ள பவன் ஷெராவத்தின் அற்புதமான வெற்றிக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்ததோடு, அவரது எதிா்காலமும் சிறப்பாக அமைய வாழ்த்துகிறேன். தொடா்ந்து தில்லிக்கும், இந்திய நாட்டிற்கும் அவா் பெருமை சோ்க்க வேண்டும் என்றாா் கேஜரிவால்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.