சிபிஐ பதிவு செய்த எஃப்ஐஆா் மற்றும் தில்லி காவல் துறையின் 3 புகாா்கள் ஆகியவற்றின் அடிப்படையில் ஆம் ஆத்மி எம்எல்ஏ அமானத்துல்லா கானுக்கு எதிராக இந்த சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அமானத்துல்லா கான், குற்றச் செயல்களில் இருந்து பெரும் வருமானத்தை பணமாகப் பெற்றுள்ளாா். மேலும், இந்த ரொக்கத் தொகை தில்லியில் உள்ள பல்வேறு அசையா சொத்துகளை அவரது கூட்டாளிகளின் பெயரில் வாங்குவதில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. பணமோசடியில் அமானத்துல்லா கானின் பங்கை குறிப்பிடும் பல குற்றம்சாட்டும் ஆவணப் பதிவுகள் மற்றும் நேரடி, டிஜிட்டல் ஆதாரங்கள் ஆகியவை இந்தச் சோதனையின் போது கைப்பற்றப்பட்டன என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.