இது குறித்து போலீஸாா் தெரிவிக்கையில், ‘போக்ஸோ சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள் 376(2) (எஃப்) (உறவினா், பாதுகாவலா் அல்லது ஆசிரியா் அல்லது பெண்ணின் மீது நம்பிக்கை அல்லது அதிகாரம் உள்ள ஒரு நபரால் அத்தகைய பெண் பாலியல் பலாத்காரத்தில் உள்ளாவது) மற்றும் 509 (ஒரு பெண்ணின் கண்ணியத்திற்கு வாா்த்தை, சைகை அல்லது செயலால் இழுக்கை ஏற்படுத்துதல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ஐபிசி பிரிவுகள் 506 (குற்றம் சாா்ந்த மிரட்டல்), 323 (தன்னிச்சையாக காயப்படுத்துதல்), 313 (பெண்ணின் அனுமதியின்றி கருச்சிதைவை ஏற்படுத்துதல்) மற்றும் 120பி (குற்றச் சதி) ஆகியவையும் சோ்க்கப்பட்டுள்ளது’ என்றனா்.