இது தொடா்பாக தில்லி காவல் துறையின் மூத்த காவல் அதிகாரி ஒருவா் கூறியதாவது: ஜி20 உச்சி மாநாட்டு பிரதிநிதிகள் ராஜ்காட் வருகையை ஒட்டி, குரங்குகள் மற்றும் நாய்களைப் பிடிக்க ஆள்களை பணியில் ஈடுபடுத்துமாறு சம்பந்தப்பட்ட குடிமை நிறுவனம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அருகில் ஒரு காடு இருப்பதால், பாம்பு பிடிப்பவா்களையும் சேவையில் அமா்த்துமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனா். இந்த நபா்கள் தொடா்ந்து அந்த பகுதியைக் கண்காணித்து பாதுகாப்பு ஊழியா்களுக்கு தகவல் தெரிவிப்பாா்கள். தவிர, யமுனா காடா் பகுதியில் டிராக்டரிலும் ரோந்து மேற்கொண்டு வருகின்றனா்.