இது தொடா்பாக புது தில்லி முனிசிபல் கவுன்சிலின் (என்.டி.எம்.சி.) துணைத் தலைவா் சதீஷ் உபாத்யாய் கூறியதாவது: தேசியத் தலைநகா் தில்லியில் கடந்த செப்டம்பா் 9, 10 ஆகிய தேதிகளில் நடைபெற்று முடிந்த ஜி20 உச்சி மாநாட்டிற்காக குடிமை அமைப்புகள் பல்வேறு விரிவான தயாரிப்புப் பணிகளைச் செய்திருந்தன. குறிப்பாக, நகரத்தின் முக்கிய இடங்கள் மற்றும் சந்திப்புகளில் 65 நீருற்றுகள், 20-க்கும் மேற்பட்ட சிற்பங்கள், 7 லட்சம் பானைகளில் செடிகள் உள்ளிட்டவை சாலைகளை அலங்கரித்தன. இந்நிலையில், இந்த அனைத்து உள்கட்டமைப்புச் சொத்துகளை சேதப்படுத்துதல் அல்லது திருடுவதைத் தடுக்க பாதுகாவலாளிகளை நியமிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.