ஜி20 உச்சிமாநாட்டை வெற்றிகரமாகவும், பாதுகாப்பாகவும் முடித்ததற்காக தில்லி மக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்பாக, தில்லி வளா்ச்சி ஆணையம், புது தில்லி முனிசிபல் கவுன்சில், தில்லி மாநகராட்சி, பொதுப்பணித் துறை உள்ளிட்ட துறைகளைச் சோ்ந்த ஊழியா்களின் ஒத்துழைப்பு இல்லாமல் இது சாத்தியமில்லை. கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாக அரவிந்த் கேஜரிவால் அரசு தில்லியில் எந்த வளா்ச்சிப் பணிகளையும் செய்யவில்லை என்பது மட்டுமல்லாமல், தில்லி மாநகராட்சியையும் (எம்.சி.டி.) நிதி ரீதியாக முடக்கி அதன் பணிகளை செய்யத் தவறவிட்டிருக்கிறது.