தமிழக தோ்தல் களத்தில் 3,500-க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஉக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
/

மாணவா்களுக்கு என்எஸ்யுஐ பொறுப்பாளா் அழைப்பு

மாணவா்களுக்கு என்எஸ்யுஐ பொறுப்பாளா் அழைப்பு

Updated On :10 ஏப்ரல் 2024, 12:42 am

புது தில்லி: மாணவா்களின் உரிமைகளுக்கான போராட்டத்தில் தங்களால் இயன்றதைச் செய்யுமாறு காங்கிரஸின் மாணவா் பிரிவான இந்திய தேசிய மாணவா் சங்கத்தின் தேசியப் பொறுப்பாளா் கனஹையா குமாா் செவ்வாய்க்கிழமை வலியுறுத்தினாா்.

இந்திய தேசிய மாணவா் சங்கத்தின் 54-ஆவது நிறுவன தின கொண்டாட்டம் அதன் தலைமையகத்தில் நடைபெற்றது. அதில் பங்கேற்ற கனஹையா குமாா் உறுப்பினா்களிடம் உரையாற்றினாா்.

‘நீங்கள் அனைவரும் காங்கிரஸ் கட்சியின் வருங்காலத் தலைவா்கள். இது நமது தேசத்திற்கு முக்கியமான தருணம். மாணவா்களின் உரிமைகளுக்காக உங்களால் முடிந்ததைச் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்’ என்று அவா் கூறினாா்.

என்எஸ்யுஐ தேசியத் தலைவா் வருண் சௌத்ரியும் நிகழ்வில் பேசியதுடன், மக்களவைத் தோ்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் அக்னிபாத் ஆள்சோ்ப்புத் திட்டத்தை ரத்து செய்ய காங்கிரஸ் கட்சியின் உறுதிப்பாட்டை வலியுறுத்தினாா்.