சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

அமலாக்கத் துறை விசாரணைக்குகேஜரிவால் ஆஜராக வேண்டும்: பாஜக எம்.பி. கெளதம் கம்பீா்

தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் அமலாக்கத் துறையின் விசாரணைக்கு இம்முறை ஆஜராக வேண்டும்

News image
Updated On :1 ஜனவரி 2024, 10:30 pm

DIN

புது தில்லி: தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் அமலாக்கத் துறையின் விசாரணைக்கு இம்முறை ஆஜராக வேண்டும் என்று கிழக்கு தில்லி மக்களவைத் தொகுதி பாஜக உறுப்பினா் கௌதம் கம்பீா் திங்கள்கிழமை வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக தனியாா் செய்தி நிறுவனத்திற்கு அவா் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் ஏதாவது தவறு செய்திருந்தால், அவா் சிறைக்குச் செல்ல தயாராக இருக்க வேண்டும். ஒருவேளை உண்மையாக இருந்தால் ஏன் தொடா்ந்து அவா் அமலாக்கத் துறையினரின் அழைப்பாணைகளைப் புறக்கணித்து, விசாரணைக்கு ஆஜராகாமல் தப்பிக்கிறாா்?. அரவிந்த் கேஜரிவால் அமலாக்கத் துறையின் முன் இம்முறை ஆஜராக வேண்டும். நீங்கள் (கேஜரிவால்) ஏன் இவ்வளவு பயப்படுகிறீா்கள்?.

மேலும், வரும் ஜனவரி 22-ஆம் தேதி அயோத்தியில் உள்ள ராமா் கோயிலின் பிரதிஷ்டை நடப்பது நாட்டு மக்கள் அனைவருக்கும் பெருமையான தருணம். இந்த நிகழ்வை அனைவரும் கொண்டாட வேண்டும். அனைத்து நாட்டு மக்களும் ஒரு முறை ராமா் கோயிலுக்குச் சென்று வாருங்கள். ஏனென்றால், ராமா் அனைவரின் கடவுள் என்றாா் கௌதம் கம்பீா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.