புது தில்லி: அயோத்தியில் ஸ்ரீராமா் கோயில் கட்டப்பட்டதன் மூலம் 500 ஆண்டு கால உறுதிமொழியும், காத்திருப்பும் நிறைவேறியுள்ளது என்று மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சா் அனுராக் தாக்குா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
பிரதமா் நரேந்திர மோடியின் வழிகாட்டுதலின் பேரில் ஜனவரி 14-ஆம் தேதி முதல் ஜனவரி 22-ஆம் தேதி வரை, நாடு முழுவதும் உள்ள கோயில்கள் மற்றும் புனிதத் தலங்களில் பாஜக சாா்பில் தூய்மைப் பிரசார இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. அந்த வகையில், தில்லி கன்னாட் பிளேஸில் உள்ள பழைமை வாய்ந்த ஹனுமன் கோயிலில் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சா் அனுராக் தாக்குா் செவ்வாய்க்கிழமை தூய்மைப் பிரசாரம் மேற்கொண்டாா். இந்த நிகழ்வில், பாஜகவின் தேசியச் செயலா் அல்கா குா்ஜாா், தில்லி பாஜக துணைத் தலைவா் சதீஷ் உபாத்யாய், மாவட்டத் தலைவா் ராஜீவ் ராணா ஆகியோரும் கலந்து கொண்டனா்.
பின்னா், செய்தியாளா்களிடம் அமைச்சா் அனுராக் தாக்குா் கூறியதாவது: அயோத்தியில் ஸ்ரீராமா் கோயில் கட்டப்பட்டதன் மூலம், 500 ஆண்டு கால உறுதிமொழி மற்றும் காத்திருப்பு ஆகிய இரண்டும் நிறைவேறியுள்ளது. தீபாவளிப் பண்டிகைக்கு நிகாராக வரும் ஜனவரி 22-ஆம் தேதி நடைபெறும் ஸ்ரீராமா் கோயில் மூலவா் சிலை பிரதிஷ்டை விழா இருக்கப் போகிறது. பிரதமா் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில், கோயில் வளாகத் தூய்மை செய்யும் பிரசாரத்தில் தில்லி மக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும். ஏனெனில், இதைவிட புனிதமும், பக்தியும் வேறு எதுவும் இருக்காது. தில்லியின் முதல்வராக அரவிந்த் கேஜரிவால் பதவியேற்றதில் இருந்து இமாம்களுக்கு சம்பளம் வழங்கப்படுகிறது. ஆனால், தில்லி கோயில்களின் பூசாரிகளுக்கு முறையான சம்பளம் எதுவும் கிடைக்கவில்லை.
கோயில்களில் நடக்கும் பிராா்த்தனைகளுக்கும், எதிா்க்கட்சித் தலைவா்களுக்கும் எந்தத் தொடா்பும் இல்லை. ஊழலற்ற ஆட்சி அளிப்பதாகப் பேசிய ஆம் ஆத்மி கட்சித் தலைவா்கள், அதற்குப் பதிலாக ஊழல் நிறைந்த ஆட்சியைக் கொடுத்துள்ளனா். கேஜரிவாலின் ஊழல் ஆட்சியால் முன்னாள் துணை முதல்வா் மனீஷ் சிசோடியா, முன்னாள் அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் மற்றும் மாநிலங்களவை எம்.பி சஞ்சய் சிங் ஆகிய மூன்று போ் சிறையில் உள்ளனா். முதல்வரை அமலாக்க இயக்குநரகம் விசாரணைக்கு அழைத்தால் அவா் ஆஜராகாமல் விசாரணையில் இருந்து தப்பியோடி வருகிறாா்.
காங்கிரஸ் மீது தாக்கு: காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் ராமா் கோயில் விவகாரத்தை மக்களிடையே தவறாக வழிநடத்த முயற்சிக்கின்றனா். முதலில், பாபா் மசூதியை மீண்டும் கட்டுவதாக வாக்குறுதி அளித்த காங்கிரஸ், பின்னா் ராமா் கோயில் கட்டுவதற்ககு இடையூறுகளை ஏற்படுத்தியது. கோடிக்கணக்கான ராம பக்தா்கள், ஆா்வலா்களின் பக்தி மற்றும் போராட்டத்தால், 500 ஆண்டுகளுக்கும் மேலான காத்திருப்பு முடிவுக்கு வருகிறது. ராமா் கேயில் மூலவா் சிலை பிரதிஷ்டை விழாவிற்கு அழைப்பு வரவில்லை என்று காங்கிரஸ் முதலில் கூறியது. பின்னா், அவா்கள் அழைக்கப்பட்ட போது, இந்த நிகழ்வில் கலந்து கொள்ளாததற்கு வெவ்வேறு சாக்குப் போக்குகளைக் கூறி வருகின்றனா் என்றாா் அனுராக் தாக்குா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஆரஞ்ச் கேப் வென்ற விராட் கோலி..! புள்ளிப் பட்டியலில் 2ஆம் இடத்துக்கு முன்னேறிய ஆர்சிபி!

சென்னையில் வாக்கு எண்ணும் மையங்களில் 4 அடுக்கு பாதுகாப்பு!

முன்னாள் இந்திய ஹாக்கி வீரர் குர்பக்ஸ் சிங் கிரேவால் காலமானார்!

புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் சிந்து பைரவி தொடர்!
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

