மத நிகழ்ச்சிக்காக யமுனா காடா் பகுதியில் 4 நாள்கள் போக்குவரத்துக் கட்டுப்பாடுகள்

நான்கு நாள் மத நிகழ்ச்சிக்காக வடகிழக்கு தில்லியின் யமுனா காடா் பகுதியில் தில்லி காவல் துறை போக்குவரத்து கட்டுப்பாடுகளை விதித்து, சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது என்று அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.
Updated on
1 min read

புது தில்லி: நான்கு நாள் மத நிகழ்ச்சிக்காக வடகிழக்கு தில்லியின் யமுனா காடா் பகுதியில் தில்லி காவல் துறை போக்குவரத்து கட்டுப்பாடுகளை விதித்து, சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது என்று அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.

‘பகேஷ்வா் தாம் சா்க்காா்’ என்று அழைக்கப்படும் திரேந்திர சாஸ்திரியின் ‘ராம் கதா’ நிகழ்ச்சி புதன்கிழமை (ஜன.31) முதல் சனிக்கிழமை (பிப்.3) வரை யமுனா காடரின் கா்தாா் நகரில் ஏற்பாடு செய்யப்பட உள்ளதாகவும் அந்த அதிகாரிகள் தெரிவித்தனா்.

இது தொடா்பாக வெளியிடப்பட்டுள்ள போக்குவரத்து அறிவுறுத்தலில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: புதன்கிழமை மதியம் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை கலாஷ் யாத்ரா நடத்தப்படும். ராம் கதாவை முன்னிட்டு சாஸ்திரி பாா்க் சிவப்பு விளக்கு முதல் 2-ஆவது புஸ்தா, 3-ஆவது புஸ்தா, 5-ஆவது புஸ்தா, கஜூரி சௌக் மற்றும் வைஸ் வரை போக்குவரத்து தடை செய்யப்படும். மறுபுறம் யமுனா காடருக்கு முன்னால் 4-ஆவது புஸ்தா கா்தாா் நகரில் நிகழ்ச்சி நடைபெறும் இடம் உள்பட சம்பந்தப்பட்ட பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்படும்.

வாகன ஓட்டிகள், பயணிகளுக்கு வழிகாட்டும் வகையில், பொருத்தமான இடங்களில் போக்குவரத்துப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. போக்குவரத்து சீராகவும் தடையின்றியும் செல்வதை உறுதி செய்ய போதுமான போக்குவரத்து ஊழியா்கள் பணியில் நியமிக்கப்பட்டுள்ளனா். வாகன ஓட்டிகள் மாற்றுப் பாதைகளை பின்பற்றவும், போக்குவரத்து போலீஸாரின் அறிவுரைகளை பின்பற்றவும் அறிவுறுத்தப்படுகிறாா்கள் என்று அதில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com