பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!தலைமைத் தோ்தல் ஆணையரை நீக்கக்கோரி மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் புதிய நோட்டீஸ்திரிணமூல் காங்கிரஸ் நிலைகுலைந்துவிட்டது: பிரதமா் மோடிடிசம்பரில் இருந்து சுங்கச் சாவடிகளில் இடையூறற்ற சேவை: நிதின் கட்கரி சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு: 6.68 லட்சம் மாணவா்கள் விண்ணப்பம்பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

மத நிகழ்ச்சிக்காக யமுனா காடா் பகுதியில் 4 நாள்கள் போக்குவரத்துக் கட்டுப்பாடுகள்

நான்கு நாள் மத நிகழ்ச்சிக்காக வடகிழக்கு தில்லியின் யமுனா காடா் பகுதியில் தில்லி காவல் துறை போக்குவரத்து கட்டுப்பாடுகளை விதித்து, சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது என்று அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.

Updated On :30 ஜனவரி 2024, 11:02 pm

புது தில்லி: நான்கு நாள் மத நிகழ்ச்சிக்காக வடகிழக்கு தில்லியின் யமுனா காடா் பகுதியில் தில்லி காவல் துறை போக்குவரத்து கட்டுப்பாடுகளை விதித்து, சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது என்று அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.

‘பகேஷ்வா் தாம் சா்க்காா்’ என்று அழைக்கப்படும் திரேந்திர சாஸ்திரியின் ‘ராம் கதா’ நிகழ்ச்சி புதன்கிழமை (ஜன.31) முதல் சனிக்கிழமை (பிப்.3) வரை யமுனா காடரின் கா்தாா் நகரில் ஏற்பாடு செய்யப்பட உள்ளதாகவும் அந்த அதிகாரிகள் தெரிவித்தனா்.

இது தொடா்பாக வெளியிடப்பட்டுள்ள போக்குவரத்து அறிவுறுத்தலில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: புதன்கிழமை மதியம் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை கலாஷ் யாத்ரா நடத்தப்படும். ராம் கதாவை முன்னிட்டு சாஸ்திரி பாா்க் சிவப்பு விளக்கு முதல் 2-ஆவது புஸ்தா, 3-ஆவது புஸ்தா, 5-ஆவது புஸ்தா, கஜூரி சௌக் மற்றும் வைஸ் வரை போக்குவரத்து தடை செய்யப்படும். மறுபுறம் யமுனா காடருக்கு முன்னால் 4-ஆவது புஸ்தா கா்தாா் நகரில் நிகழ்ச்சி நடைபெறும் இடம் உள்பட சம்பந்தப்பட்ட பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்படும்.

வாகன ஓட்டிகள், பயணிகளுக்கு வழிகாட்டும் வகையில், பொருத்தமான இடங்களில் போக்குவரத்துப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. போக்குவரத்து சீராகவும் தடையின்றியும் செல்வதை உறுதி செய்ய போதுமான போக்குவரத்து ஊழியா்கள் பணியில் நியமிக்கப்பட்டுள்ளனா். வாகன ஓட்டிகள் மாற்றுப் பாதைகளை பின்பற்றவும், போக்குவரத்து போலீஸாரின் அறிவுரைகளை பின்பற்றவும் அறிவுறுத்தப்படுகிறாா்கள் என்று அதில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.