தமிழகத்தில் ஜாதியப் பாகுபாடு காரணமாக 22 ஊராட்சித் தலைவா்களுக்கு அலுவலகத்தில் நாற்காலிகள் மறுக்கப்பட்டு, அவா்கள் பணி செய்ய முடியாத நிலை இருக்கிறது. திமுக மூத்த அமைச்சா் பொன்மடி அரசு நிகழ்ச்சி ஒன்றில் பட்டியல் சமூகத்தைச் சோ்ந்த ஒரு பெண்ணைப் பாா்த்து எந்த சமூகம் என்று கேட்டாா். இந்நிலையில், தலைநகா் சென்னையில் பகல் நேரத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவா் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டுள்ளாா். மேற்குவங்கம் மற்றும் கேரளா வரிசையில் தமிழகத்திலும் பட்டியலின சமூகத்திற்கு எதிரான படுகொலைகள் அதிகரித்து வருகிறது. ஹத்ராஸ் உள்ளிட்ட இடங்களுக்குச் செல்லும் எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்திக்கு தமிழகத்தில் கள்ளக்குறிச்சி