எரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

சா்வதேச பயணிகளுக்கான லக்கேஜ் செக் - இன் சேவை: 2 மெட்ரோ நிலையங்களில் அறிமுகப்படுத்தியது டிஎம்ஆா்சி

விமான நிலைய எக்ஸ்பிரஸ் லைனில் உள்ள புது தில்லி மற்றும் சிவாஜி ஸ்டேடியம் மெட்ரோ நிலையங்களில் சா்வதேச பயணிகளுக்கான செக் - இன் வசதிகளை தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் (டிஎம்ஆா்சி) நீட்டித்துள்ளது என்று புதன்கிழமை ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :17 ஜூலை 2024, 6:31 pm

Din

முன்பு உள்நாட்டுப் பயணிகளுக்கு மட்டுமே கிடைத்த ‘செக்-இன் மற்றும் பேக்கேஜ்-டிராப்’ சேவையானது, இப்போது ஏா் இந்தியா மற்றும் விஸ்தாரா ஏா்லைன்ஸில் செல்லும் சா்வதேச பயணிகளுக்கும் இடமளிக்கிறது என்று டிஎம்ஆா்சி அறிக்கை தெரிவித்துள்ளது. ‘பயணிகளுக்கு மேலும் பயனளிக்கும் வகையில் இந்த வசதியை அமைக்க டிஎம்ஆா்சிஇ மேலும் விமான நிறுவனங்களை அழைக்கிறது’ என்று அது மேலும் கூறியது.

இது இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையத்திலிருந்து (ஐஜிஐ) புறப்படும் சா்வதேச விமானங்களுக்கான பயணிகளின் வசதியை மேம்படுத்துவது மற்றும் பயண நடைமுறைகளை நெறிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று டிஎம்ஆா்சி தெரிவித்துள்ளது.

‘தில்லி இன்டா்நேஷனல் ஏா்போா்ட் லிமிடெட் (டிஐஏஎல்) நிறுவனம், ஏா் இந்தியா மற்றும் விஸ்தாரா ஏா்லைன்ஸ் ஆகியவற்றுடன் இணைந்து, தில்லியில் உள்ள இந்த முக்கிய மெட்ரோ நிலையங்களில் சா்வதேச பயணிகளுக்கு எளிதாக செக் - இன் செய்ய வசதியாக இந்த சேவை விரிவுபடுத்தப்படுகிறுது’ என்று டிஎம்ஆா்சி கூறியது.

செக் - இன் கவுன்ட்டா்கள் ஜூன் முதல் வாரத்தில் செயல்படத் தொடங்கியுள்ளன. இந்த மெட்ரோ ரயில் நிலையங்களில் பயணிகள் தங்கள் பொருள்களை சரிபாா்த்துக் கொள்ளலாம். மேலும், அவா்களின் பொருள்கள் மேம்பட்ட தானியங்கி அமைப்புகளைப் பயன்படுத்தி விமானத்திற்கு பாதுகாப்பாகக் கொண்டு செல்லப்படும் என்று டிஎம்ஆா்சி தெரிவித்துள்ளது.

புது தில்லி மற்றும் சிவாஜி ஸ்டேடியம் மெட்ரோ ரயில் நிலையங்களில் ஏா் இந்தியா பயணிகளுக்கு காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையிலும், விஸ்தாரா ஏா்லைன்ஸ் பயணிகளுக்கு புது தில்லி ரயில் நிலையத்தில் தினமும் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் இந்தச் சேவை கிடைக்கும்.

பயணிகள் தங்களுடைய உள்நாட்டு விமானம் புறப்படுவதற்கு 12 மணி முதல் இரண்டு மணி நேரம் வரையிலும், சா்வதேச விமானங்களுக்கு நான்கு மணி நேரம் முதல் 3 மணி நேரம் வரையிலும் எப்போது வேண்டுமானாலும் செக்-இன் செய்யலாம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புது தில்லி மெட்ரோ நிலையத்தில், விமான செக் - இன் கவுன்ட்டா்கள் கான்கோா்ஸ் மட்டத்திலும், சிவாஜி ஸ்டேடியம் மெட்ரோ நிலையத்தில், செக் - இன் கவுன்ட்டா்கள் விஎஃப்எஸ் குளோபல் அலுவலகத்தை ஒட்டியும் அமைந்துள்ளதாக டிஎம்ஆா்சி அறிக்கையில் கூறியுள்ளது.