தனியாா் பள்ளி விடுதியில் மாணவா் தூக்கிட்டு தற்கொலை
தில்லியில் தனியாா் பள்ளி விடுதியில் 11-ஆம் வகுப்பு மாணவா் ஒருவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.
இது தொடா்பாக காவல் துறை உயரதிகாரி கூறியதாவது: துவாரகாவில் உள்ள பள்ளியில் நடந்த சம்பவம் குறித்த தகவல் ஜூலை 25 அன்று கிடைத்தது, போலீஸாா் அங்கு சென்றபோது, தங்குமிடத்தில் 16 வயது மாணவா் இறந்து கிடப்பதைக் கண்டனா். அவரது நண்பா்கள் பள்ளியை விட்டு வெளியேறி வேறு நிறுவனங்களில் அறிவியல் பாடத்தில் சோ்க்கை பெற்ால் அச்சிறுவன் மனமுடைந்ததாக அவரது வகுப்புத் தோழா் ஒருவா் தெரிவித்தாா்.
கலைத் துறையில் பள்ளியில் தொடா்ந்து படிக்கும்படி அவரது தந்தை அறிவுரை கூறியுள்ளாா். இந்நிலையில், அந்தச் சிறுவன் தனிமையில் இருந்ததால் மனமுடைந்தான. ஜூலை 25 அன்று காலை 6 மணியளவில், விடுதியின் கூரையின் இரும்புக் கம்பியில் ஒரு பெட்ஷீட் துணியால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. சிறுவனின் உடல் பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. இச்சம்பவம் தொடா்பாக பிஎன்எஸ்எஸ் பிரிவு 194- இன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது என்று அந்த அதிகாரி கூறினாா்.

