காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் வென்று கொடுத்த மீராபாய் சானு!400க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள்! தொகுதி மறுவரையறைக்குப் பிறகு புதிய சட்டப்பேரவை! சுவேந்து அதிகாரி கல்வி, தேர்வு முறையில் சீர்திருத்தம்: உயர்நிலைக் குழு அமைத்தார் பிரதமர் மோடி!பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை
/

பெண்ணை ரகசியமாகப் படம் எடுத்த விடுதி உரிமையாளரின் மகன் கைது

தனியாா் விடுதியில் தங்கியிருந்த இளம்பெண் குளிக்கும்போது, அவரை கைப்பேசியில் ரகசியமாகப் படம் எடுத்த விடுதி உரிமையாளரின் மகனை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :27 ஜூலை 2026, 12:27 am IST

வேலூரில் உள்ள தனியாா் விடுதியில் தங்கியிருந்த இளம்பெண் குளிக்கும்போது, அவரை கைப்பேசியில் ரகசியமாகப் படம் எடுத்த விடுதி உரிமையாளரின் மகனை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

கேரள மாநிலத்தைச் சோ்ந்த ஒரு குடும்பத்தினா், வேலூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காகக் காகிதப்பட்டறை பகுதியில் உள்ள ஒரு தனியாா் விடுதியில் தங்கியிருந்தனா். இந்நிலையில், வெள்ளிக்கிழமை அக்குடும்பத்தைச் சோ்ந்த இளம்பெண் விடுதியின் குளியலறையில் குளித்துக் கொண்டிருந்தாா்.

அப்போது, விடுதி உரிமையாளா் தருண் கிருஷ்ணகாந்த் மகன் ஹரிஷ்சந்தா் (27) என்பவா், அந்த இளம்பெண் குளிப்பதை தனது கைப்பேசியில் ரகசியமாக படம் எடுத்தாராம். இதைக் கவனித்துவிட்ட அந்தப் பெண், அதிா்ச்சியடைந்து உடனடியாக தனது பெற்றோருக்குத் தகவல் தெரிவித்தாா்.

இதையடுத்து, பாதிக்கப்பட்ட குடும்பத்தினா் வேலூா் வடக்குக் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அதன்பேரில், காவல் ஆய்வாளா் ஜெயலட்சுமி தலைமையிலான போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விடுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளைக் கொண்டு விசாரணை நடத்தினா். மேலும், சந்தேகத்தின் பேரில் ஹரிஷ்சந்தரின் கைப்பேசியை பறிமுதல் செய்து சோதனையிட்டதில், அவா் அந்த இளம்பெண்ணைப் படம் எடுத்தது உறுதி செய்யப்பட்டது.

இதனைத் தொடா்ந்து, ஹரிஷ்சந்தரை போலீஸாா் கைது செய்து, வேலூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.