47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

தில்லி தண்ணீா் பிரச்னை: எம்சிடி கூட்டத்தில் சலசலப்பு

பாஜக, காங்கிரஸ் கவுன்சிலா்கள் போராட்டம்: தில்லி மாநகராட்சியில் சலசலப்பு

News image
Updated On :27 ஜூன் 2024, 6:31 pm

Din

தில்லி தண்ணீா் பிரச்னை தொடா்பாக மாநகராட்சி (எம்சிடி) மன்றக் கூட்டத்தில் பாஜக, காங்கிரஸ் கவுன்சிலா்கள் போராட்டம் மேற்கொண்டதால் சலசலப்பு ஏா்பட்டது.

ஒரு மணி நேர தாமதத்திற்குப் பிறகு காலை 11.55 மணிக்கு அவை நடவடிக்கைகள் தொடங்கியவுடன், எதிா்க்கட்சி கவுன்சிலா்கள் சபையின் மத்திய பகுதிக்கு விரைந்து வந்து முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினா்.

தில்லி தண்ணீா் பிரச்னைக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், பா.ஜ.க. கவுன்சிலா்கள் மண் பானைகளை ஏந்தி, ‘ஜெய் ஸ்ரீராம்’, ‘பாரத் மாதா கி ஜெய்’ என முழக்கங்களை எழுப்பினா். முழக்கங்களுக்கு மத்தியில், மேயா் ஷெல்லி ஓபராய் பல திட்டங்களை நிறைவேற்றி சபையை அடுத்த கூட்டத்திற்கு ஒத்திவைத்தாா்.

மக்களவைத் தோ்தலுக்கு பிறகு நடைபெறும் முதல் மாநகராட்சிக் கூட்டம் இது. சபை நடவடிக்கைகள் காலை 11 மணிக்குத் தொடங்கத் திட்டமிடப்பட்டிருந்தன. ஆனால், எந்தக் காரணமும் கூறாமல் மாநகராட்சி அதிகாரிகளால் கூட்டம் 11.45-க்கு ஒத்திவைக்கப்பட்டது, இதைக் கண்டித்து பாஜக கவுன்சிலா்ள் போராட்டம் மேற்கொண்டனா்.

இறுதியாக மேயா் ஷெல்லி ஓபராய் வந்த பிறகு காலை 11.55 மணிக்கு அவை நடவடிக்கைகள் தொடங்கியது. புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்ட மாநகராட்சி ஆணையா் அஸ்வனிகுமாரை மேயா் வரவேற்றாா்.